பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் அட்டாளைச்சேனையினை ஏமாற்றும் ஹக்கீம்! பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதியை தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது அட்டாளைச்சேனை பிரதேச மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயலாகவே உள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்போது, முன்னாள் அமைச்சர் உரையாற்றும் போது,
பொறுமையை கடைப்பிடியுங்கள். தலைவர் எமக்கு தருவதாகச் சொன்ன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் எமக்குக் கிடைக்கும்.

அதற்கான காலம் கனிந்துவிட்டது. ஆதரவாளர்களாகிய நீங்கள் இச் சந்தர்ப்பத்தில்தான் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும்.

இப்பொறுமைக்குப் பின்னால்தான் எமக்கு வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளார்.

Related posts

யாழ் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை

wpengine

அன்பான பெற்றோரின் கவனத்திற்கு..

wpengine

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது.!

Maash