பிரதான செய்திகள்

தெஹிவளையில் கவ்டானா வீதியில் இன்று 4 பேரின் சடலங்கள் அவைபற்றிய (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்)

இன்று (16)ஆம் திகதி தெஹிவளை கவ்டானா வீதியில் மெலானாவுக்குச் சொந்தமான 3 மாடி வீட்டில் அவா் உட்பட வயது (63)மனைவி,(55) மகள் (14)மற்றும் சகோதரியின் மகள் (14)  அவா்களது வீட்டின் கீழ் மாடியில் சடலாமாகப் காணப்பட்டனா்.

தமது வாகனத்தின் சாரதியே வீட்டுக்கு வந்து அழைத்தபோது வீடு திறபடாமலும், இருந்தன் காரணமாக அவா் அக்கம்பக்த்தில் உள்ளவா்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பாா்த்த போதே மொலானா கதிரையில் சாய்ந்திருந்தவாரும் அவரது மகள்  மற்றும் மருமகள் கோலில் இறந்தவாரும் மனைவியும் படுக்கையறையில் இறந்தவாறு காணப்பட்டுள்ளாா்கள்.SAMSUNG CSC

இதனை யடுத்து அவ்விடத்தில் விறைந்த தெஹிவளை பொலிசாா்  குற்றத்தடுப்புப் பிறிவு மற்றும் மின்சார பரிசோதகா்கள்,  பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளாா்கள்.  அத்துடன் கல்கிசை மஜிஸ்ரேட் நீதிபதி திருமதி ரணசிங்க சடலங்களைப் பாா்வையிட்டாா். அத்துடன்  களுபோவிலை  சட்ட வைத்திய அத்தியட்சகா்கள் உடன் உடற் பாகங்களை எடுத்து மேலதிக பகுப்பாய்வுகளுக்கு அனுப்பியுள்ளனா்.SAMSUNG CSC

சடலங்களை வைத்திய பரிசோதனைக்காக களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்  பொலிசாா் அவ் வீட்டினை பாதுகாப்பிட்டு சீல்  வைத்துள்ளனா்.  தடயங்கள் மிண்சார பகுப்பாய்வு மற்றும் அங்கு அருகில் உள்ளவா்கள் மற்றும் உறவினா்கள் வாய்மொழிகளையும் பதிந்து வருகின்றனா்.

SAMSUNG CSC
SAMSUNG CSC
இவ் மரணங்கள்  மின் ஓழுக்கா, அல்லது எரிவாயுவா என பரிசோதனை செய்தன் பின் வைத்திய பரிசோதனை பின்னரே விபத்தா அல்லது கொலையா என அறிவிக்கப்படும் என எதிாபாா்க்கப்படுகின்றது.

Related posts

பொலிஸ் அவசர சேவைப் பிரிவு தமிழில்

wpengine

எருக்கலம்பிட்டி விளையாட்டு போட்டி! பிரதம அதியான விக்னேஸ்வரன்

wpengine

850 தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ள நடவடிக்கை

wpengine