பிரதான செய்திகள்

திருமலை – கண்டி பிரதான வீதியில் விபத்து!

திருமலை – கண்டி பிரதான வீதியில் இன்று லொறியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாயிலிருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற 25, 43, 40 மற்றும் 20 வயதுடைய நால்வரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நீங்கள் அதிஷ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள் – அமீர் அலி

wpengine

அப்துல் கலாமின் பிறந்த நாளுக்கு இந்தியா தூதரகம் அழைப்பு

wpengine

நயன்தாராவின் காதல் தின செய்தி

wpengine