பிரதான செய்திகள்

திருகோணமலை காணி,பள்ளிவாசல் தொடர்பாக மஹ்ரூப் பேச்சுவார்த்தை

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பது தொடர்பான விடயங்களை பிரதியமைச்சர் இதன் போது ஆளுநருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

எதிர்கால அபிவிருத்திகளுக்காக தனது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பரஸ்பரமுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் ஆளுனருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

Related posts

ஹிஸ்புல்லாஹ் கட்டிக்கொடுத்த நகர சபை கட்டடத்தை ஹாபீஸ் திறக்க திட்டம்! ஹிஸ்புல்லாஹ் காட்டம்

wpengine

அரச பணியாளர்களுக்கு கவலையினை கொடுக்க உள்ள அரசாங்கம்

wpengine

65,000 வீடுகள் விவகாரம்: சுவாமிநாதனுக்கு சுமந்திரன் கடிதம்

wpengine