பிரதான செய்திகள்

திருகோணமலை காணி,பள்ளிவாசல் தொடர்பாக மஹ்ரூப் பேச்சுவார்த்தை

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பது தொடர்பான விடயங்களை பிரதியமைச்சர் இதன் போது ஆளுநருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

எதிர்கால அபிவிருத்திகளுக்காக தனது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பரஸ்பரமுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் ஆளுனருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

Related posts

வடமேல் மாகாண தமிழ் மொழி பாடசாலை பிரச்சினை தொடர்பில் முதலமைச்சருடன் கலந்துரையாடல்

wpengine

மு.காவின் தராசுச் சின்னம் கள்ள மனைவியின் குழந்தைக்கு ஈடானது

wpengine

மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும் – றிசாட் எம்.பி

Maash