பிரதான செய்திகள்

தமிழில் தேசிய கீதம்;அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தில் மனு

68 ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் போது தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி  மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

போதைப்பொருள் கடத்தல்! உரியவர்களின் சொத்து முடக்கப்படும்.

wpengine

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு! பூர்வீக முஸ்லிம்கள் கவலை

wpengine

சிறைத்துறையில் 1,663 பணியிடங்கள் வெற்றிடம்!

Editor