பிரதான செய்திகள்

தடுப்பூசி ஏற்றுவதுடன், செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும்

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும் கோவிட் – 19 தொற்று பரவல் ஆபத்து குறையவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அத்துடன், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எனினும், தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் நாட்டில் 70 வீதமான பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதுடன், செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும் என கோவிட் தடுப்பு செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலில் மோதி 16 எருமைகள் பலி!

Editor

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – பிரசன்ன ரனதுங்க!

Editor

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முஸ்லிம் நிதி அமைச்சர் அலி நடவடிக்கை

wpengine