பிரதான செய்திகள்

டிசம்பர் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு: சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோர் பாதிப்பு

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸாரின் கையொப்பத்துடன் நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நீர்க்கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படுகின்றது.

அதன் பிரகாரம், சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்கான வீட்டுப்பாவனை நீர்க்கட்டணம் 15 அலகுகள் வரை எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

எனினும், 16 தொடக்கம் 20 வரையான அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 320 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

21 தொடக்கம் 25 வரையான அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 17 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 300 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 26 தொடக்கம் 30 வரையான அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 26 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 600 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் அல்லாத ஏனைய வீட்டுப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

5 அலகுகள் வரை பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 200 ரூபாவாகவும், 6 தொடக்கம் 10 வரையான அலகுகளுக்கு பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும் மதாந்தக் கட்டணம் 185 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 தொடக்கம் 15 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 6 ரூபாவாலும் மாதாந்தக் கட்டணம் 180 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதுடன், 16 தொடக்கம் 20 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 12 ரூபாவாலும் மாதாந்தக் கட்டணம் 320 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகின்றது.

21 தொடக்கம் 25 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 17 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 300 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகின்றது.

26 தொடக்கம் 30 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 26 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 600 ரூபாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் மத ஸ்தலங்களுக்கான நீர்க்கட்டணம் ஒரு ரூபாவாலும் மாதாந்தக் கட்டணம் 250 ரூபாவிற்கு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை வர்த்தமானி அறிவித்தலை ஆய்வு செய்ததன் ஊடாக அறியக்கிடைத்துள்ளது.

Related posts

மரிச்சிக்கட்டி மக்களுக்காக போராட்டம் நடாத்திய முல்லைத்தீவு முஸ்லிம்கள்

wpengine

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

wpengine

வடக்கு,கிழக்கு காணிப் பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றங்கள் தேவை! நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் நீதி அமைச்சர் இடையே விவாதம்

wpengine