பிரதான செய்திகள்

டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்! -மஹிந்த ராஜபக்ஷ-

டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ டிசம்பரில் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூன் மாதம் 1ஆம் திகதி புதிய இராணுவத் தளபதி

wpengine

அதிபரின் அடாவடி தனம் தமிழ் பாட ஆசிரியை தற்கொலை

wpengine

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

Editor