பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு! நாளை விடுதலை

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சமூக வலைத்தள இணைப்பாளரான கவிந்த கமகே தனது முகநூல் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

எனினும் ஞானசார தேரரை விடுதலை செய்யும் எந்த தயார் நிலைகளும் இல்லை என ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ஞானசார தேரரை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பும் கூறியுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரரின் பிறந்த தினம் நாளைய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

wpengine

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் -அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல

wpengine