பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு நாளை தீர்ப்பு குற்றவாளியா?

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு நாளை திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

முன்னதான ஞானசார தேரரின் கைவிரல் ரேகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 ஜனவரி 25ம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் எக்னெலிகொட தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற போது ஞானசார தேரர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக மாகல்கந்தே சுதந்த தேரர்

wpengine

வரலாற்றுச் சிறப்பு மிக்க தேசிய நல்லிணக்கக் கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரம் முன்னாள் ஜானதிபதி சந்திரிக்கா

wpengine

முசலி,கொண்டச்சி கிராமத்திற்கான குடிநீர் திட்டம்! முசலி செயலாளர் ஆரம்பித்தார்.

wpengine