பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு நாளை தீர்ப்பு குற்றவாளியா?

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு நாளை திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

முன்னதான ஞானசார தேரரின் கைவிரல் ரேகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 ஜனவரி 25ம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் எக்னெலிகொட தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற போது ஞானசார தேரர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine

கே.கே.மஸ்தானின் வாகனம் சற்று முன்னர் விபத்து! சாரதிக்கு சிறு காயம்

wpengine

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்! நசீருக்கு தூதுவர் நன்றி

wpengine