பிரதான செய்திகள்

ஜீ.எஸ்.பி.பாரிய பாதிப்பாக இருக்காது அமைச்சர் றிஷாட்

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி சலுகை நீக்கம் காரணமாக பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க குடியரசு இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி சலுகையை இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று அமைச்சர் ரிசாதின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர், கடந்த வருடம் அமெரிக்காவுக்கான மொத்த ஏற்றுமதியின் பெறுமதி 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவற்றில் பெரும்பாலானவை ஆடை ஏற்றுமதிகளாகும்.

ஆடைகளுக்கு அமெரிக்காவினால் ஜீ.எஸ்.பி சலுகை வழங்கப்படுவதில்லை. அந்த வகையில் குறித்த சலுகை நீக்கம் காரணமாக கூடியபட்சம் 20-25 வீத ஏற்றுமதிகளே பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

‘சுமார் 350 இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர், யுவதிகள் நாட்டுக்குள் உலவுகின்றனர்’ – அருட்தந்தை சிறில் காமினி!

Editor

இனி ஐக்கிய தேசியக் கட்சியுடன் -அமைச்சர் சரத் பொன்சேகா

wpengine

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும்

wpengine