உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட்

பண மோசடி வழக்கில் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

இதனையடுத்து ஜாகிர் நாயக்கிடம் பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரச நிர்வாகத்துறை உட்பட்ட பல துறைகளின் வேதனங்கள் அதிகரிப்பு

wpengine

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம்

wpengine

இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

wpengine