செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

ஜப்பான் நிதியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்.

பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

 கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜப்பான் தூதரகத்தின் அமைச்சர் மற்றும் பிரதி பிரதானி கமோஷிடா ( Kamoshida, Minister / Deputy head of mission embassy of Japan to Sri Lanka) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் உள்ளடங்களாக பிரதேச செயலாளர்கள், UN WOMEN மற்றும் Chrysalis அமைப்பின் அதிகாரிகள், பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

 இதன் போது வியாபார விருத்தி தொடர்பான பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களினால் தயாரிக்கப்பட்ட பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்கள் (உணவு, கலை பொருட்கள், ஆடை வகைகள்) என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனை சந்தையும் இடம் பெற்றது.  

அதே நேரம் பெண்களின் வியாபார முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியு தவியுடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான பல்வேறு தொழில் விருத்திக்கான உபகரணங்கள் (தையல் இயந்திரம், குளிர்சாதனப்பெட்டி, dehydrator போன்றவை வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்

wpengine

அரச பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சைகளை ரத்து

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

wpengine