பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான கூட்டங்களுக்கு செல்லப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தாம் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டு எதிர்க்கட்சியில் அமரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதன் பின்னர் ஜனாதிபதியுடனான எந்தவொரு கூட்டத்திலும் நான் பங்கேற்றது கிடையாது என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து அபராத தொகை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Editor

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்

wpengine