அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி வழங்கிய 22 வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய 22 வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய 22 வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதி மட்டுமே இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கண்காணிக்கும் நோக்கில் அநுர மீட்டர் எனப்படும் இணைய கண்காணிப்பு செயன்முறையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் போதே செலுத்தும் வரி தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மட்டுமே ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு, ஆட்சி முறைமை, ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, சமூகப் பாதுகாப்பு, உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வழங்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அளிக்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் 35 வீதமானவை பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(தமிழ்வின் தளம்)

Related posts

அமைச்சின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் டெனிஸ்வரன் பங்கேற்பு

wpengine

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

wpengine

முசலி பிரதேச செயலக வாழ்வாதார மோசடி! சல்லடை போட்ட பொது கணக்காய்வு திணைக்களம்.

wpengine