பிரதான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மஹிந்த ராஜபஷ்சவின் புகைப்படங்கள்

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது.

அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு செல்வதாக அறிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படமும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

மலசக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி . !

Maash

ஐ.நா.வின் அறிக்கையாளரை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

wpengine