பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றி பெறுவார் என்பதை உறுதிசெய்த புலனாய்வு தகவல்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றி பெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்து கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கண்டி, திகன பகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் வெற்றிபெற்று விடலாம் என்பதே ராஜபக்சக்களின் பிரச்சார வியூகமாக இருந்தது.

இதற்காகவே விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில உட்பட மேலும் பலர் அரசியல் மேடைகளில் இனவாதத்தை கக்கினர். மதவாதத்தை தூண்டினர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் இவற்றை நிராகரித்தனர்.

இதனால் கதிகலங்கிபோன ராஜபக்ச படையணி, வழமையான பாணியில் போர் வெற்றியை விற்றுபிழைக்க முற்பட்டது. பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடியதால் அந்த வியூகமும் கைகூடவில்லை.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தால் அதனை வைத்து சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடிவிடலாம் எனவும் ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் திட்டம் போட்டனர்.

எனினும், களநிலைவரத்தை சிறப்பாக ஆராய்ந்து, தந்திரோபாய விட்டுக்கொடுப்புடன் நிபந்தனையற்ற ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததால் – என்ன செய்வதென்று புரியாமல் மொட்டுக்கட்சி காரர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இறுதி அஸ்திரமும் புஷ்வாணமாகும் நிலை உருவாகியுள்ளதால் தொடை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் இனவாதம், மதவாதம் பேசுகின்றனர், போலிகளை பரப்புகின்றனர் என்பதை சிங்கள, பௌத்த மக்கள் இன்று உணர்ந்துவிட்டனர்.

சஜித்தின் கூட்டத்துக்கு அலைகடலென திரண்டுவரும் மக்கள் இதனை எம்மிடம் தெளிவுபடுத்துகின்றனர்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியென புலனாய்வு அமைப்புகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அரச சார்பற்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இது உறுதியாகியுள்ளது.

சில மாவட்டங்களில் மஹிந்தவுக்கு ஆதரவு இருந்தாலும், அதற்கு சமாந்தரமாக சஜித் அலையும் வீசுகின்றது. ஆனால், சஜித்துக்கு சாதகமாக உள்ள மாவட்டங்களில், சஜித் 100 வீதம் என்றால் மஹிந்த 35 வீதம் என்ற நிலையே இருக்கின்றது. அதாவது 65 சதவீத மேலதிக வாக்குகளால் மாவட்டங்களை சஜித் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதே எமது இலக்காகும். அதற்காகவே தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்.

சஜித்தால் மட்டுமே நாட்டில் நீடித்து நிலைக்ககூடிய நிலையான சமாதானத்தையும், நிலைபேண்தகு அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடிவும். எனவே, அன்னமே எங்கள் தெரிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லெண்ணங்கள் நாட்டில் நிறைவேறும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிறிதரன்,சுமந்திரன் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டார்கள்.

wpengine

சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

wpengine

உள்ளூராட்சி மன்ற அரச ஊழிய வேட்பாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாதது ஏன்?பாராளுமன்றில் சஜித் கேள்வி

Editor