பிரதான செய்திகள்

சோள இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வியாபார பண்ட வரி நீக்கம்!

திரிபோஷா உற்பத்திக்கு அவசியமான சோளத்தை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வியாபார பண்ட வரி நீக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

திரிபோஷா உற்பத்திக்காக மாதமொன்றுக்கு அவசியமான சோளத்தை உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாமையால் இந்தியாவிலிருந்து சோளத்தை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திரிபோஷா நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்தை பயிரிடும் முறைமை பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில்

Maash

பேஸ்புக்கில் பாம்பு! காட்டுத்தீ

wpengine

இந்தத் துர்ப்பாக்கியத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டிய கிறிஸ்தவர்கள், இந்துக்கள்

wpengine