இன்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்களும், முற்போக்கு முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்) வழமை போன்று கலந்து சிறப்பித்திருந்தது.
இந்தவகையில் சுவிஸ்லாந்தில் நடைபெறுகின்ற மேதின ஊர்வலங்களில் கடந்த 33 வருடங்களாக தொடர்ச்சியாக கலந்து சிறப்பித்து வரும் “புளொட்” அமைப்பினர், இவ்வருடமும் கலந்து சிறப்பித்திருந்தினர். 
