பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

சுற்றுலா விசாவில் வந்து தீவிர மதப்பிரச்ச்சாரம் , சர்ச்சையை தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட 15 இந்தியர்கள்..!

சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிர மதப் பிரச்சாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழு கைது செய்து நாடு கடத்தியது.

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.   அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாகளின் கீழ் நாட்டிற்கு வந்திருந்தனர்.

அவர்களில் இருவர்,  யாழ்ப்பாணத்தின் மாதல் பகுதியில் நோய்களை குணப்படுத்துவதற்கான தீவிர மத சேவையை நடத்த தயாராகி வந்தனர், மேலும் இந்தப் பகுதியில் உள்ள இந்து தேசியவாத அமைப்புகளால் அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

  கைது செய்யப்பட்ட இரண்டு மத குருமார்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும் 08 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டு,   பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு சனிக்கிழமை (08) நாடு கடத்தப்பட்டனர்.

அதேபோல், யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த மேலும் 05 இந்தியர்கள்   பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு சனிக்கிழமை (08)  நாடு கடத்தப்பட்டனர்.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

Editor

பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம் மற்றும் மரண தண்டனை : அதிரடி சட்டம்

wpengine

முதலமைச்சருக்கு எதிராக தேங்காய் உடைப்பு

wpengine