பிரதான செய்திகள்

சுனாமி எச்சரிக்கை! கரையோர மக்கள் அவதானம்

இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இந்த முன்னெச்சரிக்கை தெளிவூட்டல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்படுவதுடன், இதற்காக காலநிலை அவதான நிலையத்தின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த தெளிவூட்டல் செயற்பாடு ஒரு மணித்தியாலம்வரை இடம்பெறவுள்ளது.

Related posts

வவுனியா ,சதொச பகுதியில் மோட்டார் விபத்து

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது புத்தள மக்களிடம் எதிரியாக கட்ட  வேண்டும்

wpengine

சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் – நிமல்

wpengine