பிரதான செய்திகள்

சுசிலின் இடத்திற்கு எஸ்.பி. மேலும் இரண்டு அமைச்சர் நீக்க நடவடிக்கை

அரசை கடுமையாகச் விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஆராய்ந்து வருகின்றார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் இதன்போது ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்படுகின்றது. விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.

அதன்போது இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளது. அவ்வேளையில் இவ்விருவரும் நீக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று நீக்கப்பட்டார். அவர் வகித்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிளப் வசந்த கொலைப் பிரதான சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

Maash

கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தலைமத்துவத்தை வெளியேற்ற மு.கா முக்கியஸ்தர்கள் சதி முயற்சி!

wpengine

வித்தியாவுக்கு ஒரு நீதி? ஹரிஷ்ணவிக்கு ஒரு நீதியா? 6 மாதங்கள் கடந்தும் ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி இல்லை!

wpengine