பிரதான செய்திகள்

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் நிக்கெய் ஏசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளுமாறும் சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வேறு நடைமுறையை பின்பற்றுவதனால், ஏனைய தரப்பினரும் இணங்கும் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

Related posts

இந்த ரமலானில் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு, 50 தொன் பேரீச்சம்பழங்கள் விநியோகம்.

Maash

மருத்துவமனை அனைத்திலும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை..!

Maash

சம்பூர் சம்பவங்கள் போல் வேறெங்கும் நடந்ததில்லை – மஹிந்த

wpengine