பிரதான செய்திகள்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வருக்கு இடமாற்றம்!-பொலிஸ் தலைமையகம்-

நான்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, ராஜித ஸ்ரீ தமிந்த, அஜித் ரோஹன மற்றும் சஜீவ மெதவத்த ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பேனை கூத்திய இனவாதிகள் அமைச்சர் றிசாட்

wpengine

ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதி ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash

தமிழரை கிழக்கில் முதலமைச்சராக வேண்டும் வியாளேந்திரன் (பா.உ)

wpengine