பிரதான செய்திகள்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வருக்கு இடமாற்றம்!-பொலிஸ் தலைமையகம்-

நான்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, ராஜித ஸ்ரீ தமிந்த, அஜித் ரோஹன மற்றும் சஜீவ மெதவத்த ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கிராம சேவகர் ஒருவரின் விசித்திரமான உத்தரவு! மக்கள் அவதி (விடியோ)

wpengine

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்! 12வருட கால முயற்சி

wpengine

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

wpengine