பிரதான செய்திகள்

சாலியை கைது செய்ய வேண்டும்! புர்காவுக்கு எதிரான அமைச்சர்

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, அசாத் சாலி மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அசாத் சாலியை நிச்சியமாகக் கைது செய்ய வேண்டும். அவர் மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படைவாதமே பின்னர் பயங்கரவாதமாக உருவாகிறது. ஷரீயா சட்டத்தின் செயற்பட வேண்டுமென்றால் அவர் சவுதி அரேபியாவுக்கே செல்ல வேண்டும். இலங்கையில் இருக்க வேண்டுமென்றால், இலங்கையின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டே வாழ வேண்டும். 

இலங்கையிலிருந்துக் கொண்டு ஷரீயா பற்றி பேச முடியாது. எனவே அவரைக் கைது செய்து, அவருக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அசாத் சாலி தொடர்பில் சிஐடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Related posts

சனத் நிஷாந்தவின் நீக்கம் நியாயமற்றது- மஹிந்த

wpengine

ஆனமடுவ நோக்கி நவவி விஜயம்! பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

wpengine

வீதி சட்டத்தை மீறிய தந்தை : பொலிஸில் முறைப்பாடு செய்த சிறுவன்

wpengine