பிரதான செய்திகள்

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை இதே!

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான மருத்துவச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் இலகுப்படுத்தப்படவுள்ளன
இதன்படி நாட்டின் 150 ஆதார மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் அமைக்கப்படும் சிறப்பு பிரிவுகளால் இந்த மருத்துவச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படவுள்ளன.


அமைச்சரவை இதற்கான முடிவை எடுத்துள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமே தற்போது சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிரிவாக அமைந்துள்ளது.


இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் பணிப்புரையின் கீழ் புதிய முறை பின்பற்றப்படவுள்ளது.
இதேவேளை ஜனவரி 27ம் திகதி முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன்கூட்டிய பதிவுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

திகனயில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெருநாள் தொழுகை

wpengine

சமூகத்தின் குரலாக செயற்படும் ஊடகங்களுக்கு கைகொடுப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்- என். எம். அமீன்

wpengine

வவுனியாவில் பெண்களை அச்சுறுத்தும் நிதி நிறுவனங்கள்

wpengine