பிரதான செய்திகள்

சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை

இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கு கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் தடை செய்துள்ளன.

எனினும் இந்த தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் பிரதான கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்களால் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்கனவே இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்கரைப்பற்றில் இன்று ACMC இன் முதலாவது மக்கள் சந்திப்பு ..!

Maash

ஏழை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

மன்னாரில் மக்கள் கருத்தின்படி காற்றின்முலம் மின் உட்பத்தி – ஜனாதிபதி தெரிவிப்பு .

Maash