பிரதான செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் புத்தளத்தில்  உரையாற்றியதாக கூறப்படும் மதராஸா பாடசாலையில் பணியாற்றிய இருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் இந்த மதராஸா பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த மாணவர்களிடையே உரையாற்றியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, 
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26,27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம்

wpengine

முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்! ஜே.ஆரின் நிலை தான் உங்களுக்கு

wpengine

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல், இலங்கை விநியோகத்தில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய நிறுவனம்.

Maash