பிரதான செய்திகள்

சம்பிக்க,மனோ,ஹக்கீம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் கைகோர்க்க போவதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.


இந்த கட்சிகளின் தலைவர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளனர்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அண்மையில் அனுமதி வழங்கியது.


உருவாக்கப்படும் கூட்டணியின் தலைமை, கூட்டணியின் பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம், பிரதமர் வேட்புமனு மட்டுமல்லாது வேட்புமனு குழுவின் தலைமை, பதவியும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க செயற்குழு தீர்மானித்திருந்தது.


இந்த விடயங்கள் தொடர்பாக உன்னிப்பாக கவனம் செலுத்தி, சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாகும் விரிவான கூட்டணியில் தமது கட்சிகளும் இணைந்து மக்களின் எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசாங்கம் ஒன்றை உருவாக்க பங்களிப்பு செய்ய போவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடனடி தொடர்பு WhatsApp உட்பட

wpengine

சிங்கள மொழியில் கற்பதற்கு ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றப்பட்டுள்ள கொழும்பு ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயம்.

wpengine

முஸ்லிம்களின் தலைவன் றிஷாட் பதியுதீன் என்பதை நிருபிக்கும் காலம் இது !

wpengine