பிரதான செய்திகள்

சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதல்! சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

வவுனியா கலபோகஸ்வௌ என்ற பிரதேசத்தில் வைத்து கடந்த 16 ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதாகவும் அதனை கண்டித்துமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

பிரதேச செயலகததில் இருந்து பிரதேச செயலக சந்தி வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் மீண்டும் பிரதேச செலயகத்திற்கு வருகை தந்து பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றினை கையளித்தனர்.

Related posts

மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட ரிசாட் எம்.பி.

Maash

மஹிந்தவின் உண்மைகள்! மைத்திரிபால பகிரங்கப்படுத்த வேண்டும்- அநுர திஸாநாயக்க

wpengine

மன்னார்- கண்டி பஸ்ஸில் முதியோர் திடீர் மரணம்

wpengine