பிரதான செய்திகள்

சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது.

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் குழுவொன்று வழங்கிய கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் விசாரணை நடத்தியதாக ஊடகவியலாளர் மாநாட்டில் பெண் ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது தொடர்பாக தன்னிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்! ஆசிரியர் தினவிழாவில் அமைச்சர் றிசாத் பதியுதீன்

wpengine

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

wpengine

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

wpengine