பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் சந்தேகநபர் ஒருவர், கல்பிட்டி – கரம்ப பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனைக்காகவே குறித்த மருந்து தொகையானது இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 42300 மருந்து அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட வேன் மற்றும் மருந்து தொகையுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கட்டாயமாக்கப்பட்ட பேருந்து சாரதிகள் சீட் பெல்ட்..!

Maash

இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு

wpengine

காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்

wpengine