பிரதான செய்திகள்

சட்டவிரோத மணல் கொள்ளை! 125000ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 125000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி பொலிஸர் கைது செய்துள்ளனர்.

குறித்த டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலைபடுத்திய நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ், ஏழு நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஷிரந்தி ராஜபக்ச கைது தொடர்பில் மல்வத்து மகா விஹாரையின் அறிக்கை!

Maash

முள்ளிவட்டுவான் தரசேன நீர்ப்பாசன திணைக்களத்தின் நடவடிக்கையால் விவசாயிகள் பாதிப்பு

wpengine

அமைச்சர் றிஷாட்டை விழ்த்த கூட்டமைப்புடன் ஒப்பந்தம்! ஹக்கீம் வெட்கம் இல்லையா?

wpengine