பிரதான செய்திகள்

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

“ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் இருக்கவேண்டும்.

இதுவே தற்போதைய நிலைமையில் நல்லது.”
இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


“சட்டத்தை மதித்து முப்படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இக்கால கட்டத்தில் வீணான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.


கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வதைத் தடுப்பதற்காக அரசும், சுகாதார அமைச்சும், முப்படைகளும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Related posts

ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் ரஞ்சித்

wpengine

உப்பு உற்பத்தியில் இரு வருடங்களில் இலங்கை தன்னிறைவு அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

wpengine

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தலில் 9பேரின் பெயர் விபரம்

wpengine