பிரதான செய்திகள்

சட்ட விரோத மணல் அகழ்வு மஹியங்கனை – வேரகங்தொட பாலம் அபாய நிலை

சட்ட விரோதமாக மணல் வியாபாரம் செய்த காரணத்தினால், மஹியங்கனை – வேரகங்தொட பாலம் அபாய நிலைமையில் உள்ளது என தெரியப்படுத்திய, ஹிரு ஊடகவியலாளரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை காவற்துறை தலைமை காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

wpengine

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

wpengine

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

wpengine