பிரதான செய்திகள்

சஜித் அணிக்கு 5 அமைச்சு பதவிகளை வழங்க ரணில் மந்திர ஆலோசனை

ஐக்கிய மக்கள் சக்தியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று இவர்கள் அமைச்சரவையில் இணைந்துக்கொள்ள உள்ளனர்.

இவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரியவருகிறது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வக்கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதனடிப்படையில், கட்சிகளாக அல்லாமல் தனித்தனி நாடாளுமன்ற உறுப்பினர்களாக சில கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அடுத்த சில தினங்களில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும் வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர்.

wpengine

20க்கு பதிலாக அமைச்சர் ஹக்கீம்,றிஷாட்க்கு வீட்டுதிட்டம்,மௌலவி நியமனம்

wpengine

மே 18ஐ தமிழர் பிரிவினை வாதிகளுக்கு மகிழ்ச்சியானதாக மாற்ற அரசாங்கம் முயற்சி.!

wpengine