அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கோட்டாபயவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்கினால், 30 நாட்களில் சகல பிரச்சினைகளும் தீரும் .

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கடந்த காலங்களில் நாட்டில் சகல விடயங்களிலும் நேரடியான தீர்மானங்களை மேற்கொண்டதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அவர்கள் எங்கள் தலைவர்கள். அவர்களின் உயிர் ஆபத்தில் இருப்பது குறித்து நாம் அஞ்சுகிறோம்.

கடந்த காலத்தில், இவை அனைத்திற்கும் எதிராக தைரியமாகவும் நேரடியாகவும் முடிவுகளை எடுத்த தலைவர்களை தற்போது சாடாதீர்கள்.

நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபயவிற்கு வழங்கி அவருக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுங்கள். அவர் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து காட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Related posts

யாழ் பல்கலைக்கழக துப்பாக்கி சூடு! தமிழ் மக்கள் பேரவையின் கண்டனம்

wpengine

சமஷ்டியை வென்றெடுக்கும் இராஜதந்திரம்

wpengine

3 சட்டமூலங்களின் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தர் சபாநாயகர்!

Editor