உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொவிட் பரிசோதனை இனி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அமெரிக்கா அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் அமுலாகும் வகையில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொவிட் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக கொவிட் 19 கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் செயற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் றிஷாட் மீது வீசப்படும் சேறுகள் ஒரு போதும் தாக்கத்தினையும் செலுத்தப்போவதில்லை

wpengine

புகையிலைக் கன்றுகளுக்கு இடையே கஞ்சா செடி – ஒருவர் கைது .

Maash

கிறிஸ்மஸ் வாழ்த்து பலஸ்தீன இளைஞர் சோகம்

wpengine