பிரதான செய்திகள்

கொவிட் 19 சில குழுக்கள் மோசடியில் வணிகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

கொவிட் – 19 தொற்றை காரணம் காட்டி வணிக நடவடிக்கைகளின் போது சில குழுக்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


அநுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


அத்தியாவசிய மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலைகள் இப்போது நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளன.


தொற்றுநோயை சாதகமாக கருதி வணிகத்துறையில் பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மோசடியில் ஈடுபட்ட வணிகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related posts

அரசாங்கம் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

wpengine

றிஷாட்டை பழி தீர்க்க 10வருட திருடனுடன் கூட்டு சேர்ந்த டயஸ்போராவின் முசலி முஜூப் றஹ்மான்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் அமைச்சின் ஊடாக வவுனியா யுவதிகளுக்கு தொழில் பயிற்சி

wpengine