அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு .

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது.

கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தடுப்பூசி வழங்கும் முறை தொடர்பில் தௌிவு படுத்தவில்லை சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

wpengine

ஊத்துச்சேனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிய அமீர் அலி

wpengine

நாளை முதல் மின்சாரம் வழமைக்கு- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

wpengine