அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு .

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது.

கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள்! வெளிவாரிப்பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும்

wpengine

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்..!

Maash

பொலன்னறுவையில் வேற்றுக்கிரக வாசிகள் ? – பிரதி அமைச்சர் ரீ.பி. சரத்.

Maash