பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனா அதிகரிப்பு! கோத்தாவின் வவுனியா விஜயம் ரத்து

எதிர்வரும் 11ம் திகதி வவுனியாவுக்கு வியம் செய்ய இருந்த சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விஜயம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாகவே அவரின் இந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகம் கடந்த முதலாம் திகதி முதல் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்அதன் ஆரம்பவிழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும் கொரோனா பரவல் காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், குறித்த நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மித்தெனிய மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது.!

Maash

அமைச்சர் ஹலீம் மீதான ஆசாத் சாலியின் குற்றச்சாட்டுகள் அபாண்டமாகும்

wpengine

விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெக்கு பதிலாக பெற்றோலை பயன்படுத்தியதால், வீடு தீப்பற்றி எரிந்தது.

Maash