பிரதான செய்திகள்

கொங்கிரீட் வீதி அமைப்பதற்காக இடங்களை பார்வையிட்ட அமீர் அலி

(எம்.எஸ்.எம்.றிஸ்மின்)

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீரான் ஹாஜியாரின்  அழைப்பின் பேரில்   விஜயம் செய்த கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள்   காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் 1ம் குறுக்கு வீதிக்கு கொங்கிரீட் வீதியுடன்  கூடிய  வடிகால்  அமைப்பது தொடர்பாக    பார்வையிட்டார்.

இது தொட‌ர்பாக மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் பிரதி அமைச்சர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச  செயலாளர் ஜனாப் MM நெளபல் அவர்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டம் பணிப்பாளர்  HM றுவைத் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
e93a2228-29ad-43d7-8e8b-4d09adee8726

Related posts

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வீதி – நடந்து செல்லத்தடை

Maash

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை!

Editor

தழிழ் கைதிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் சிவசக்தி ஆனந்தன்

wpengine