பிரதான செய்திகள்

கொகேய்ன் விவகாரம்; 3.2 பில்லியன் ரூபா பெறுமதியானது – 07 பேர் கைது

றத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கொகேய்ன் போதைப் பொருள் தொடர்பில் சந்தேகநபர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து 218 கிலோவும் 600 கிராம் நிறையுடைய கொகேய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றின் பெறுமதி 3.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என்று கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் கல்கிஸ்ஸ பொலிஸாரினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கண்டெடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 07 பேரையும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

wpengine

அழகும் கெட்டது தொழிலும் கெட்டது

wpengine

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்

wpengine