பிரதான செய்திகள்

குற்றங்களை ஒப்புக்கொண்டு விக்னேஸ்வரன்

தன் மீதான குற்றங்களை விக்னேஸ்வரன் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன் போது வட மாகாண எதிர்க் கட்சித் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பிலும், அவரின் கேள்விகள் தொடர்பிலும் உரையாற்றிய முதலமைச்சரின் கருத்துக்களுக்கு பதில் அளித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இன்று முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை.

வட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

3 மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும்

wpengine

ஹக்கீம் கும்பிடு படம்! SLTJ எதிர்ப்பு வரும் என்றால் மார்க்கத்தை சொல்லமாட்டார்கள்.

wpengine

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வு! அதிகாரிகள் அசமந்த போக்கு

wpengine