பிரதான செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குழுவினருக்கு மின்சார சலுகை வழங்க அமைச்சர் நடவடிக்கை

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை வழங்குவதற்காக நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இது தொடர்பில் நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு-மஹிந்தானந்த அளுத்கமகே

wpengine

கொழும்பு பிரதான பஸ் நிலையம் , பஸ் டயரில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

Maash

முசலியில் முப்பெரும் விழா! பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில்

wpengine