பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘கிளிநொச்சியில் விரைவாக மீள் குடியமர்த்தவும்’

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், வெடிபொருள் அகற்றப்படாத பிரதேசங்களில், வெடிபொருள்களை அகற்றி, விரைவாக மீள் குடியமர்த்துமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, இத்தாவில்,  கிளாலி, வேம்பெடுகேணி  ஆகிய பிரதேசங்களில், இதுவரை நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத நிலையில் இருப்பதாகவும், இதனால், குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக வெளியிடங்களிலும்  வாடகை வீடுகளிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் கூறினர்.

முகமாலை, கிளாலி, இத்தாவில், வேம்பெடுகேணி ஆகிய பிரதேசங்கள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களில், தற்போது வெடிபொருள் அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எமது நாட்டு மக்களுக்கு எந்தவித அச்சமும் இன்றி தைரியமாக நடமாடடும் இன்றைய தினம்

wpengine

கூட்டமைப்பு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை சுமந்திரன்

wpengine

வாக்கு வாதத்தால் சபையில் நேற்று சிரிப்பும் சலசலப்பும்

wpengine