பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே தினமான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலாளரின் பொது மக்களுக்கான அறிவித்தல்

wpengine

மலையக மக்களுக்கு மூவாயிரம் மில்லியன் நிதி!

Editor

பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் இணைத்து கொள்ள வேண்டும்

wpengine