பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி விபத்து; மூவர் பலி; டிப்பர் சாரதி கைது!

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இத்தாவில்  பகுதியில் கார் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி நேற்று (26) இரவு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் காரில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 38 வயதுடைய தந்தை  படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பளை பிரதேசத்தின் தர்மக்கேணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

Related posts

தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜபஷ்வுக்கு எதிராக பிரச்சாரம்

wpengine

விக்னேஸ்வரனை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோள்!

wpengine