பிரதான செய்திகள்

காலி – கொழும்பு வீதியில் புதிய பஸ் சேவை ஆரம்பம்!

காலி வீதி, ஹொரணை, கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதியை இணைக்கும் விசேட பஸ் சேவை இன்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் மொரட்டுவ மற்றும் இரத்மலானை டிப்போக்களால் இந்த விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பயணிகளின் வசதிக்காக இரத்மலானை ரயில் நிலையத்தில் இருந்து மஹரகம மற்றும் பொருபன, வெரஹெர, கொட்டாவ ஆகிய பாதைகளில் புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

நாளாந்தம் பெருந்தொகையான பயணிகள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் பயன்படுத்தும் இந்த வழித்தடங்களுக்கு புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் பெருந்தொகையான மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்த பேஸ்புக் நிறுவனம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கட்டார் நிகழ்வு இடமாற்றம்

wpengine

ஹக்கீம்,ஹசன் அலி கண்ணாம்பூச்சி விளையாட்டு (பகுதி-02)

wpengine