பிரதான செய்திகள்

காத்தான்குடியில் உண்டியல் திருட்டு! பொலிஸ் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட பாலமுனையில் பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட 63 வயது நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் வினோபா இந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


பாலமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் உண்டியலையே மேற்படி நபர் உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


குறித்த பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமராவின் உதவியுடனேயே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் வழிகாட்டலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

லெப்டினன் யோஷித இடைநிறுத்தம்; சம்பளமும் படிகளும் நிறுத்தம்.

wpengine

பள்ளிவாசல்களில் ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்க வேண்டும்.

wpengine

ஏறாவூர் பரகா ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஹிஸ்புல்லாஹ்

wpengine